கோவை செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்
- by CC Web Desk
- Jun 25,2025
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாக சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த பூங்கா பணிகள் ஜூன் 2025ல் நிறைவு பெற்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வேகமாக முடித்து பூங்கா திறக்கப்படவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். பணிகள் 85% நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா வாளகத்தில் ஆணையர் நடத்திய ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் த.குமரேசன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன்(மத்தியம்), துரைமுருகன் (மேற்கு), துணை மாநகரப்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், நாகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.