பழனி அருகே கோர விபத்து! லாரி- வேன் மோதியதில் 1 பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
- by admin
- Oct 30,2023
Tamil Nadu
பழனி நெய்க்காரப்பட்டி, கொழுமம் மெயின் ரோடு அய்யம்பாளையம் அருகே வந்த லாரியும் தேங்காய் லோடு ஏற்றி வந்த வேணும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குளானது.
இந்த விபத்தில் தேங்காய் வண்டியில் முன் இருக்கையயில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்தில் பலி ஆகியுள்ளனர். வேனின் பின் பகுதியில் பயணித்த 10க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. லாரியில் இருந்த 2 பேர் சுதாரித்து கொண்டு குதித்ததால் உயிர் தப்பியுள்ளனர்.
காவல் துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு உடுமலை மற்றும் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கு காரணம் என்ன என்பது போலீசார் விசாரணைக்கு பின்னர் தெரியவரும்
படம் & தகவல்: முருகேசன் - பாப்பம்பட்டி