கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 


எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் இந்தாண்டு வாட்டி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

SOURCE: DINAKARAN