உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி இன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கிழக்கு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இந்திய உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படால் தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும் எனவும் அப்போதுதான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் என தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.