கோவை சிவானந்தா காலனியிலிருந்து புதுப்பாலம் பகுதிக்கு செல்லும் வழியில் பல குடியிருப்புகள் உள்ளன. வெளியே இருந்து இந்த வழியே செல்பவர்கள் பலரும் அங்கு சாலையோரத்தில் சிறுநீர் கழித்து விடுவதால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

பலமுறை வழக்கமான எச்சரிக்கை விடுத்தும், சிறுநீர் கழிப்பது அங்கு குறையாமல் இருந்துள்ளது. எனவே அந்த மக்கள் அப்பகுதியில் சிறுநீர் கழிக்கும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முயற்சியில் சாலை ஓரத்தில் உள்ள சுவர்கள் அருகே கயிறு கட்டி அதில் செருப்பு, துடைப்பாம் ஆகியவற்றை தொங்கவிட்டுள்ளனர். இது இப்போது கோவையில் வைரலாகி உள்ளது.