கோவையில் வழக்காமான கோடை காலத்திற்கு பல மடங்கு மாறுபட்டு இந்தாண்டு வெயில் கொளுத்தி வருகிறது.

கடும் வெயிலில் பயணம் செய்வோர் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது லேசாக இளைப்பாற வசதியாக புதுச்சேரி, திருச்சி போன்ற சில பகுதிகளில் தற்காலிக பச்சை நிற வலைகள் கொண்டு மேற்கூரைகள் அமைக்கப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இதே மாதிரியான பச்சை நிற மேற்கூரைகளை டிராபிக் சிக்னல்கள் உள்பட கோவை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை கோவை மாநகர காவல் துறையுடன் இனைந்து மாநகராட்சி முன்னெடுக்க உள்ளது. 

இதை எப்படி திட்டமிட்ட இடங்களில் சரியாக செய்வது என காவல் துறையுடன் விரைவில் ஆலோசித்து, ஒப்புதல் பெற்று மாநகராட்சி தரப்பில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரியவருகிறது.